சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய் பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி "உச்சி தனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி" கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி "உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி உன் கண்ணில் நீர் வழிந்தால் என்நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ" |