Home / Home / Kuzhandhai Paadalgal / தவளையார்

தவளையார்


தத்தித் தத்தித் தவளையார்

தாவித் தரையில் பாய்கிறார்

கத்திக் கத்தி இரவெல்லாம்

கண்ணை விழித்துப் பாடுகிறார்



கிட்டே பாம்பு வந்ததும்

எட்டி அஞ்சி ஓடுகிறார்

அருகில் நீரைப் பார்த்ததும்

எகிறித் தாவிக் குதிக்கிறார்.




     RSS of this page

    Written by:   Version:   Edited By:   Modified